ஹர ஹர நம: பார்வதி பதயேஹர ஹர மஹா தேவா

Wednesday, August 4, 2010

"ராம ராம ராம"

அபி ராம, குணா கர, தாசரதே!
ஜக தேக தநுர் தர, தீர மதே
ரகு நாயக, ராம, ரமேச, விபோ!
வரதோ பவ! தேவ, தயா ஜலதே

அபி ராம = எல்லாரும் மிக விரும்பும் (ரமிக்கும்),
குணா கர = குணக் கொழுந்தே!
தாசரதே = தசரதன் புதல்வா!
ஜகத் ஏக = உலகிலேயே நீ தான்
தநுர் தர = கூர் வில்லாளன்!
தீர மதே = கூர் மதி கொண்டன்!

ரகு நாயக = ரகு குலக் கொழுந்தே!
ராம = ராமா (ராம என்னும் தாரக மந்திரம்)
ரமேச = ரமா என்னும் சீதைக்குத் தலைவா!
விபோ = சர்வமும் வியாபித்து இருப்பவனே!
வரதோ பவ = (எங்களுக்கு) என்றும் அருள் செய்வாய்! - (விஜயீ பவ என்பதைப் போலே, வரதோ பவ என்று கேட்கிறார்கள் அடியவர்கள்)
தேவ, தயா ஜலதே = இறைவனே! கருணைக் கடலே!

ராமா-ரமா - இதன் நுட்பத்தைத் தெரிஞ்சிக்கணும்!
ரமித்தல் என்றால் விரும்புதல்!
* பலராலும் ரமிக்கப்படுபவன் (விரும்பப்படுபவன்) = ராமன்!
* அவனை ரமிப்பவர்கள் = ரமா!

ரமா என்பது பொதுவாக அன்னையைக் குறிக்கும் சொல்! மகாலக்ஷ்மி, சீதை!
ஆனால் ரமிக்கும் அடியவர்களையும் ரமா என்று குறிக்கும் வழக்கம் உண்டு!
அவன் ராமன்! நாம் ரமா!

இந்த ராமம் என்பது வெறும் இராமவதாரம் மட்டுமன்று! சீதையின் கணவனைக் குறிக்கும் சொல் மட்டுமல்ல!
வாசுதேவன் என்பதைப் போலவே ராம என்பதும் பொதுவான இறை நாமம் தான்! மிகவும் நுட்பமான நாமம்! இன்னும் ஒரு படி மேலே! நுட்பமான மந்திரம்!

ராம - என்பதற்குத் தாரக மந்திரம் என்று பெயர்! இந்தத் தாரக மந்திரத்தைத் தான் காசியில் முக்தி அடையும் உயிர்களின் செவிகளில், சிவபெருமான் ஓதுகிறார்!
நமோ நா"ரா"யணாய ("ரா") + ந"ம" சிவாய ("ம") = "ராம"
இது தான் ராம என்னும் தாரக மந்திர மூலப் பொருள்!

* ம-வை எடுத்து விடுங்கள்! ந+சிவாய என்று ஆகி, மங்களம் இல்லை என்று ஆகி விடும்!
* ரா-வை எடுத்து விடுங்கள்! நமோ நாணாய என்று ஆகி, நீர் ஆதாரமே போய் விடும்!
ஆக "ராம" என்பது தான் இரு பெரும் மந்திரங்களையும் ஒரு சேரக் கட்டுகிறது!

அதனால் தான் சஹஸ்ரநாமத்தில் இதன் பொருள் பெரிதாக வைத்துப் பேசப்படுகிறது! ஈசன் பார்வதிக்கு உபதேசித்து அருள்கிறார்!
ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோ ரமே!
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வராணனே!!

ஈஸ்வரோ உவாச = ஈசன் சொல்வது:
ஸ்ரீ = திருமகள் சொரூபமாய், மங்களகரமாக விளங்கிடும்
ராம ராம ராம = இந்த (ரமா-ராம) சம்பந்தமான "ராம ராம ராம" என்னும் மந்திரம்
இதி = இதுவே!

ரமே = நான் ரமிக்கும்(மிகவும் விரும்பும்)
ராமே = ராம என்னும் மந்திரமே
மனோ ரமே! = மிகவும் அழகான-ஆனந்த மயமானது!

சஹஸ்ர நாம தத்= (இறைவனின்) ஆயிரம் நாமங்களான இத்தனைக்கும்
துல்யம் = ஒப்பானது
ராம நாம = ராம என்னும் இந்த மந்திர நாமம்

வர அனானே = அழகுத் திருமுகம் கொண்ட மங்கையே(பார்வதியே)!

No comments: