ஹர ஹர நம: பார்வதி பதயேஹர ஹர மஹா தேவா

Thursday, August 12, 2010

குருவாயூருக்கு வாருங்கள் - ஒரு குழந்தை சிரிப்பதை பாருங்கள்


குருவாயூருக்கு வாருங்கள் - ஒரு
குழந்தை சிரிப்பதை பாருங்கள்

குருவாயூருக்கு வாருங்கள் - ஒருகுழந்தை சிரிப்பதை பாருங்கள்
ஒரு வாய் சோறு ஊட்டும் தாய் முன்
உட்கார்ந்திருப்பதை காணுங்கள்



(குருவாயூருக்கு...)
கண்ணனின் மேனி கடல் நீலம்
அவன்
கண்கள் இரண்டும் வான் நீலம்
கடலும் வானும் அவனே என்பதை
காட்டும் குருவாயூர் கோலம்

(குருவாயூருக்கு...)

சந்தியா காலத்தில் நீராடி அவன்
சந்நிதி
வருவார் ஒரு கோடி
நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயணநாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண

சந்தியாகாலத்தில் நீராடி அவன்
சந்நிதி
வருவார் ஒரு கோடி
மந்திர குழந்தைக்கு வாகைசாத்து

மாலைகள் இடுவார் குறை ஓடி


(குருவாயூருக்கு...)

உச்சிக்காலத்தி சிங்காரம் அவன்
ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம்

பச்சைக்குழந்தையை பார்க்கும் போதே
பாவையர் தாய்மை ரீங்காரம்

நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண
நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண

(குருவாயூருக்கு...)

மாலை நேரத்தில் சீவேலி
அவன் மாளிகை முழுவதும் நெய்வேலி

நெய்விளக்கேற்றி பொய் இருள் அகற்று

நித்தம் தருவாள் ஸ்ரீதேவி
நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண
நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண


சாத்திரம் தந்த கண்ணனுக்குராத்திரி பூஜை ஜகஜோதி
பாத்திரம் கண்ணன் பால் போல் மக்கள்

பக்தியில் பிறந்த உயர்நீதி


குருவாயூருக்கு வாருங்கள் - ஒருகுழந்தை சிரிப்பதை பாருங்கள்
ஒரு வாய் சோறு ஊட்டும் தாய் முன்
உட்கார்ந்திருப்பதை காணுங்கள்
(குருவாயூருக்கு...)

நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண
நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண

No comments: