ஹர ஹர நம: பார்வதி பதயேஹர ஹர மஹா தேவா

Friday, May 20, 2011

கீதா மாஹாத்மியம் (கீதையின் பெருமை)

ध्यानश्लोका:
ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं।
व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतं॥
अद्वैतामृतवर्षिणीं भगवतीमष्टादशा ध्यायिनीमम्ब।
त्वामनुसंदधामि भगवद् गीते भवद्वेषिणीम्॥
ஓம் பார்தா²ய ப்ரதிபோ³தி⁴தாம் ப⁴க³வதா நாராயணேந ஸ்வயம்|
வ்யாஸேந க்³ரதி²தாம் புராணமுநிநா மத்⁴யே மஹாபா⁴ரதம்||
அத்³வைதாம்ருதவர்ஷிணீம் ப⁴க³வதீமஷ்டாத³ஸா² த்⁴யாயிநீமம்ப³|
த்வாமநுஸந்த³தா⁴மி ப⁴க³வத்³ கீ³தே ப⁴வத்³வேஷிணீம்||
பார்தா²ய = பார்த்தனுக்காக
ப⁴க³வதா நாராயணேந = பகவான் நாராயணனால்
ஸ்வயம் ப்ரதிபோ³தி⁴தாம் = தானே உபதேசித்தது
புராணமுநிநா வ்யாஸேந = பழமையான முனிவர் வியாசரால்
மஹாபா⁴ரதம் மத்⁴யே க்³ரதி²தாம் = மகாபாரதத்தின் நடுவே தொகுக்கப் பட்டது
அம்ப³! ப⁴க³வத்³ கீ³தே! = தாயே! பகவத் கீதே!
அஷ்டாத³ஸ² அத்⁴யாயிநீம் = பதினெட்டு அத்தியாயம் கொண்டவளே!
அத்³வைத அம்ருத வர்ஷிணீம் = அத்வைத அம்ருதத்தை மழையாகப் பொழிபவளே!
ப⁴க³வதீம் = இறைவியே!
ப⁴வத்³வேஷிணீம் = பிறப்பை நீக்குபவளே!
த்வாம் அநுஸந்த³தா⁴மி = உன்னை தியானிக்கிறேன்

नमोऽस्तुते व्यास विशालबुद्धे फुल्लारविन्दायतपत्रनेत्र।
येन त्वया भारततैलपूर्णः प्रज्वालितो झानमयः प्रदीपः॥
நமோऽஸ்துதே வ்யாஸ விஸா²லபு³த்³தே⁴ பு²ல்லாரவிந்தா³யதபத்ரநேத்ர|
யேந த்வயா பா⁴ரததைலபூர்ண​: ப்ரஜ்வாலிதோ ஜ்ஞா²நமய​: ப்ரதீ³ப​:||
வ்யாஸ = வியாச பகவானே!
விஸா²லபு³த்³தே⁴ = விசாலமான ஞானம்/புத்தி கொண்டவரே!
பு²ல்ல அரவிந்த³ அயத பத்ர நேத்ர = பூத்த தாமரை இதழ்கள் போன்ற கண்கள் கொண்டவரே!
த்வயா = உங்களால்
யேந பா⁴ரத = இந்த மகா பாரதம்
தைல பூர்ண​: = எண்ணை ஊற்றப் பட்டு நிறைந்து உள்ள
ஞா²நமய​: ப்ரதீ³ப​: = ஞானமயமான ஒளி பரப்பும் விளக்கென
ப்ரஜ்வாலித: = ஒளிர்கிறது
தே நம: அஸ்து = உங்களுக்கு வணக்கங்கள்

प्रपन्नपारिजाताय तोत्रवेत्रैकपाणये।
ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः॥
ப்ரபந்நபாரிஜாதாய தோத்ரவேத்ரைகபாணயே|
ஜ்ஞாநமுத்³ராய க்ருஷ்ணாய கீ³தாம்ருதது³ஹே நம​:||
ப்ரபந்ந பாரிஜாதாய = அண்டியவர்களுக்கு வேண்டியதைத் தரும் பாரிஜாத கற்பக விருட்சமான
தோத்ர வேத்ர ஏக பாணயே = ஒரு கையில் தேரோட்டும் சாரதியாக சாட்டை கம்புடனும்
ஜ்ஞாநமுத்³ராய = (இன்னொரு கையில்) ஞானத்தின் சின்னத்தை முத்திரையாக பிடித்து கொண்டிருக்கும்
கீ³த அம்ருத து³ஹே = கீதை என்னும் அமுதத்தை கறந்து தருகின்ற
க்ருஷ்ணாய நம​: = ஸ்ரீ கிருஷ்ணனுக்கு வணக்கங்கள்

वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम्।
देवकीपरमानन्दं कृष्णं वन्दे जगद् गुरूम्॥
வஸுதே³வஸுதம் தே³வம் கம்ஸசாணூரமர்த³நம்|
தே³வகீபரமாநந்த³ம் க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³ கு³ரூம்||
வஸுதே³வஸுதம் = வசுதேவரின் பிள்ளையான
தே³வம் = தேவனான
கம்ஸசாணூரமர்த³நம் = கம்சன் சாணுரன் ஆகியோரை அழித்தவனான
தே³வகீபரமாநந்த³ம் = தேவகியின் பரம ஆனந்தமான
க்ருஷ்ணம் = க்ருஷ்ணனனை
ஜக³த்³ கு³ரூம் வந்தே³ = உலகாசிரியனை வணங்குகிறேன்


भीष्मद्रोणतटा जयद्रथजला गान्धारनीलोत्पला।
शल्यग्राहवती कृपेण वहनी कर्णेन वेलाकुला।।
अश्वत्थामविकर्णघोरमकरा दुर्योधनावर्तिनी।
सोत्तीर्णा खलु पाण्डवै रणनदी कैवर्तकः केशवः।।
பீ⁴ஷ்மத்³ரோணதடா ஜயத்³ரத²ஜலா கா³ந்தா⁴ரநீலோத்பலா|
ஸ²ல்யக்³ராஹவதீ க்ருபேண வஹநீ கர்ணேந வேலாகுலா||
அஸ்²வத்தா²மவிகர்ணகோ⁴ரமகரா து³ர்யோத⁴நாவர்திநீ|
ஸோத்தீர்ணா க²லு பாண்ட³வை ரணநதீ³ கைவர்தக​: கேஸ²வ​:||
பீ⁴ஷ்ம த்³ரோண தடா = பீஷ்மரும் துரோணரும் இரு கரைகளாகவும்
ஜயத்³ரத²ஜலா = ஜயத்ரதன் அதன் நீராகவும்
கா³ந்தா⁴ர நீலோத்பலா = காந்தாரன் அதில் பூத்த அல்லி மலராகவும்
ஸ²ல்யக்³ராஹவதீ = சல்யன் சுறா மீனாகவும்
க்ருபேண வஹநீ = கிருபன் அதன் வேகமாகவும்
கர்ணேந வேலாகுலா = கர்ணன் அதில் எழும்பும் அலையாகவும்
அஸ்²வத்தா²ம விகர்ண கோ⁴ர மகரா: = அஸ்வத்தாமன் விகர்ணன் ஆகியோர் கோரமான திமிங்கலம் போன்ற மீன்களாகவும்
து³ர்யோத⁴ந ஆவர்திநீ = துர்யோதனன் அதன் சுழல்களாகவும்
ஸா ரணநதீ³ = இருக்கும் அந்த போர் நதி
பாண்ட³வை: = பாண்டவர்களால்
உத்தீர்ணா = கடக்கப் பட்டது
கேஸ²வ​: கைவர்தக​: க²லு = (ஏனெனில்) கேசவன் படகோட்டி அல்லவோ !

पाराशर्यवचः सरोजममलं गीतार्थगन्धोत्कटं।
नानाख्यानककेसरं हरिकथासम्बोधनाबोधितम्।।
लोके सज्जनषट्पदैरहरहः पेपीयमानं मुदा।
भूयाद्भारतपङ्कजं कलिमलप्रध्वंसिनः श्रेयसे।।
பாராஸ²ர்யவச​: ஸரோஜமமலம் கீ³தார்த²க³ந்தோ⁴த்கடம்|
நாநாக்²யாநககேஸரம் ஹரிகதா²ஸம்போ³த⁴நாபோ³தி⁴தம்||
லோகே ஸஜ்ஜநஷட்பதை³ரஹரஹ​: பேபீயமாநம் முதா³|
பூ⁴யாத்³பா⁴ரதபங்கஜம் கலிமலப்ரத்⁴வம்ஸிந​: ஸ்²ரேயஸே||
பாராஸ²ர்ய வச​: ஸரோஜம் = பராசரரின் மகன் (வியாசன்) வார்த்தைகளில் நீரில் பூத்த தாமரையாகவும்
கீ³த அர்த² க³ந்த⁴: உத்கடம் = கீதையின் உபதேசங்கள் அதன் நறுமணமாகவும்
நாநாக்²யாநக கேஸரம் = பல்வேறு கதைகள் பின்னிப் பிணைந்த தாமரைத் தண்டுகளாகவும்
ஹரிகதா² ஸம்போ³த⁴நா போ³தி⁴தம்= ஹரியின் கதைகளே அத்தாமரையின் விரிந்து அகன்ற இதழ்களாகவும்
லோகே = இவ்வுலகில்
அஹரஹ​: = ஒவ்வொரு நாளும்
ஸஜ்ஜந ஷட்பதை³ = நல்ல மனிதர்களான தேனீக்களால்
முதா³ = மகிழ்ச்சியாக
பேபீயமாநம் = அருந்தப் படுவதும்
கலிமலப்ரத்⁴வம்ஸிந​: = கலி என்னும் மலம் (தீங்கைத்) தொலைப்பதாகவும்
அமலம் = குற்றமில்லாததும்
பா⁴ரத பங்கஜம் = ஆகிய பாரதம் என்னும் தாமரையால்
ஸ்²ரேயஸே பூ⁴யாத் = நன்மை விளையட்டும்

मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिम्।
यत्कृपा तमहं वन्दे परमानन्दमाधवम्॥
மூகம் கரோதி வாசாலம் பங்கு³ம் லங்க⁴யதே கி³ரிம்|
யத்க்ருபா தமஹம் வந்தே³ பரமாநந்த³மாத⁴வம்||
யத் க்ருபா = எவருடைய கருணையால்
மூகம் = ஊமையும்
வாசாலம் = பேசும் திறன்
கரோதி = அடைகிறானோ
பங்கு³ம் = ஊனமுற்றவனும்
கி³ரிம் லங்க⁴யதே = மலை ஏறும் திறனுடையவனாகிறானோ
தம் பரமாநந்த³மாத⁴வம் = அந்த பரமானந்தம் தரும் மாதவனை
அஹம் வந்தே³ = நான் வணங்குகிறேன்

अथ गीतामाहात्म्यम्
गीताशास्त्रमिदं पुण्यं यः पठेत् प्रयतः पुमान्।
विष्णोः पदमवाप्नोति भयशोकादिवर्जितः ।।
கீ³தாஸா²ஸ்த்ரமித³ம் புண்யம் ய​: படே²த் ப்ரயத​: புமாந்|
விஷ்ணோ​: பத³மவாப்நோதி ப⁴யஸோ²காதி³வர்ஜித​: ||
இத³ம் புண்யம் = இந்த புண்ணியமான
கீ³தா ஸா²ஸ்த்ரம் = கீதா சாத்திரத்தை
ய​: புமாந் = எந்த மனிதர்
ப்ரயத​: படே²த் = முயற்சி செய்து படிக்கிறாரோ (அவர்)
ப⁴யஸோ²காதி³ = பயம், சோகம் ஆகியவை
வர்ஜித​: = நீங்கி
விஷ்ணோ​: பத³ம் = விஷ்ணுவின் பதத்தை
அவாப்நோதி = அடைகிறார்.

गीताध्ययनशीलस्य प्राणायामपरस्य च।
नैव सन्ति हि पापानि पूर्वजन्मकृतानि च।।
கீ³தாத்⁴யயநஸீ²லஸ்ய ப்ராணாயாமபரஸ்ய ச|
நைவ ஸந்தி ஹி பாபாநி பூர்வஜந்மக்ருதாநி ச||
கீ³தா அத்⁴யயந ஸீ²லஸ்ய = (எவர்) எப்போதும் கீதையை ஓதிக்கொண்டும்
ப்ராணாயாமபரஸ்ய ச = மூச்சை அடக்கி யோகத்திலும் திளைக்கிறாரோ அவரிடம்
பாபாநி = பாவங்கள்
பூர்வஜந்மக்ருதாநி ச ஏவ = கடந்த ஜன்ம செயல்களின் விளைவுகளும்
ந ஸந்தி = இருப்பதில்லை

मलनिर्मोचनं पुंसां जलस्नानं दिने दिने।
सकृद्गीताम्भसि स्नानं संसारमलनाशनम्॥
மலநிர்மோசநம் பும்ஸாம் ஜலஸ்நாநம் தி³நே தி³நே|
ஸக்ருத்³கீ³தாம்ப⁴ஸி ஸ்நாநம் ஸம்ஸாரமலநாஸ²நம்||
பும்ஸாம் = மனிதர்கள்
தி³நே தி³நே = தினந்தோறும்
ஜலஸ்நாநம் = நீரில் குளிப்பதால்
மலநிர்மோசநம் = உடல் அழுக்கு அகற்றப் படுகிறது
ஸக்ருத் = ஒரு தடவை
கீ³தா அம்ப⁴ஸி ஸ்நாநம் = கீதை என்னும் நீரில் குளிப்பதால்
ஸம்ஸாரமலநாஸ²நம் = சம்சாரம் என்னும் மாசு நீங்குகிறது.

गीता सुगीता कर्तव्या किमन्यैः शास्त्रविस्तरैः।
या स्वयं पद्मनाभस्य मुखपद्माद्विनिःसृता॥
கீ³தா ஸுகீ³தா கர்தவ்யா கிமந்யை​: ஸா²ஸ்த்ரவிஸ்தரை​:|
யா ஸ்வயம் பத்³மநாப⁴ஸ்ய முக²பத்³மாத்³விநி​:ஸ்ருதா||
பத்³மநாப⁴ஸ்ய = பத்மநாபனின்
ஸ்வயம் முக²பத்³மாத் = தன்னுடைய முகத்தாமரையிலிருந்து
யா விநி​:ஸ்ருதா = எது வெளிவந்ததோ
ஸுகீ³தா = கேட்க இனிமையானதோ
கீ³தா = அந்த கீதை
கர்தவ்யா = படிக்கப் படவேண்டும்
அந்யை​: = வேறு
ஸா²ஸ்த்ரவிஸ்தரை​: கிம் = சாத்திரங்களை விரிவாக (படிக்க வேண்டும்) எதற்கு?

भारतामृतसर्वस्वं विष्णोर्वक्त्राद्विनिःसृतम्।
गीतागङ्गोदकं पीत्वा पुनर्जन्म न विद्यते॥
பா⁴ரதாம்ருதஸர்வஸ்வம் விஷ்ணோர்வக்த்ராத்³விநி​:ஸ்ருதம்|
கீ³தாக³ங்கோ³த³கம் பீத்வா புநர்ஜந்ம ந வித்³யதே||
விஷ்ணோ: வக்த்ராத் = விஷ்ணுவினுடைய திருமுகத்தில் இருந்து
பா⁴ரத அம்ருத ஸர்வஸ்வம் = பாரதம் என்னும் அமுத களஞ்சியம்
விநி​:ஸ்ருதம் = உதித்தது
கீ³தாக³ங்கோ³த³கம் = கீதை என்னும் கங்கை நீரை
பீத்வா = குடித்தபின்
புநர்ஜந்ம ந வித்³யதே = மறுபடி ஒரு ஜன்மம் ஏற்படுவது இல்லை

सर्वोपनिषदो गावो दोग्धा गोपालनन्दनः।
पार्थो वत्सः सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत्॥
ஸர்வோபநிஷதோ³ கா³வோ தோ³க்³தா⁴ கோ³பாலநந்த³ந​:|
பார்தோ² வத்ஸ​: ஸுதீ⁴ர்போ⁴க்தா து³க்³த⁴ம் கீ³தாம்ருதம் மஹத்||
ஸர்வ உபநிஷத³: கா³வ: = எல்லா உபநிடதங்களும் பசுக்களாம்
தோ³க்³தா⁴ கோ³பாலநந்த³ந​: =  கண்ணனே பால்கறப்பவனாம்
பார்த²: வத்ஸ​: = பார்த்தனே கன்றாம்
ஸுதீ⁴ போ⁴க்தா = தெளிந்த அறிவுடையோரே பால் அருந்துவோர்
து³க்³த⁴ம் கீ³தாம்ருதம் மஹத் = அமுதமான கீதையே பால்

एकं शास्त्रं देवकीपुत्रगीतमेको देवो देवकीपुत्र एव।
एको मन्त्रस्तस्य नामानि यानि कर्माप्येकं तस्य देवस्य सेवा॥
ஏகம் ஸா²ஸ்த்ரம் தே³வகீபுத்ரகீ³தமேகோ தே³வோ தே³வகீபுத்ர ஏவ|
ஏகோ மந்த்ரஸ்தஸ்ய நாமாநி யாநி கர்மாப்யேகம் தஸ்ய தே³வஸ்ய ஸேவா||
ஏகம் ஸா²ஸ்த்ரம் தே³வகீபுத்ர கீ³தம் = ஒரே சாத்திரம் தேவகி மைந்தனின் வார்த்தைகள்
ஏக: தே³வ: தே³வகீபுத்ர ஏவ = தேவகியின் மைந்தனே ஒரே தெய்வம்
தஸ்ய யாநி நாமாநி ஏக: மந்த்ர: = அவரது பெயர்களே ஒரே மந்திரம்
ஏகம் கர்மா: அபி = ஒரே கடமையும் (தொழிலும்)
தஸ்ய தே³வஸ்ய = அந்த தேவனுடைய
ஸேவா = சேவை செய்தலே

अथ ध्यानम्
शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं
विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गम्।
लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं
वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम्॥
ஸா²ந்தாகாரம் பு⁴ஜக³ஸ²யநம் பத்³மநாப⁴ம் ஸுரேஸ²ம்
விஸ்²வாதா⁴ரம் க³க³நஸத்³ருஸ²ம் மேக⁴வர்ணம் ஸு²பா⁴ங்க³ம்|
லக்ஷ்மீகாந்தம் கமலநயநம் யோகி³பி⁴ர்த்⁴யாநக³ம்யம்
வந்தே³ விஷ்ணும் ப⁴வப⁴யஹரம் ஸர்வலோகைகநாத²ம்||
ஸா²ந்தாகாரம் = அமைதி வடிவானவர்
பு⁴ஜக³ஸ²யநம் = பாம்பின் மீது துயிலுபவர்
பத்³மநாப⁴ம் = தாமரை போன்ற நாபி கொண்டவர்
ஸுரேஸ²ம் = தேவர்களின் தலைவர்
விஸ்²வாதா⁴ரம் = உலகைத் தாங்குபவர்
க³க³நஸத்³ருஸ²ம் = ஆகாயம் போன்றவர்
மேக⁴வர்ணம் = மேகத்தின் நிறத்தை ஒத்தவர்
ஸு²பா⁴ங்க³ம் = சுபமான உடலைக் கொண்டவர்
லக்ஷ்மீகாந்தம் = திருமகளின் கணவர்
கமலநயநம் = தாமரைக் கண்கள் உடையவர்
யோகி³பி⁴: = யோகிகளால்
த்⁴யாநக³ம்யம் = தியானித்து அடையப் படுபவர்
ப⁴வப⁴யஹரம் = பிறவி என்னும் பயத்தை போக்குபவர்
ஸர்வலோகைகநாத²ம் = எல்லா உலகிற்கும் தலைவர்
விஷ்ணும் = விஷ்ணுவை
வந்தே³ = வணங்குகிறேன்

यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैः स्तवैर्वेदैः।
सांगपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः॥
ध्यानावस्थिततद् गतेन मनसा पश्यन्ति यं योगिनो
यस्यान्तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः॥
யம் ப்³ரஹ்மா வருணேந்த்³ரருத்³ரமருத​: ஸ்துந்வந்தி தி³வ்யை​: ஸ்தவை:।
வேதை³: ​ஸாங்க³பத³க்ரமோபநிஷதை³ர்கா³யந்தி யம் ஸாமகா³​:।।
த்⁴யாநாவஸ்தி²ததத்³ க³தேந மநஸா பஸ்²யந்தி யம் யோகி³நோ।
யஸ்யாந்தம் ந விது³​: ஸுராஸுரக³ணா தே³வாய தஸ்மை நம​:।।
யம் = எவரை
ப்³ரஹ்மா வருண: இந்த்³ர ருத்³ர மருத​: = பிரம்மா வருணன் இந்திரன் உருத்திரன் மருத்துகள் எல்லாரும்
தி³வ்யை​: ஸ்தவை: = திவ்விய துதிகளால்
ஸ்துந்வந்தி = துதிக்கிறார்களோ
யம் = எவரை
ஸாமகா³​: = சாம வேதம் ஓதுபவர்கள்
ஸாங்க³ பத³ க்ரம = பத க்ரம முறைகளுடன்
உபநிஷதை³: = உபநிடதங்களாலும்
வேதை³: ​= வேதங்களாலும்
கா³யந்தி = இசைக்கிறார்களோ
த்⁴யாநாவஸ்தி²த: யோகி³ந: = தியானத்தில் நிலைபெற்ற யோகிகள்
தத்³ க³தேந மநஸா = பரவச மனதுடன்
யம் பஸ்²யந்தி = எவரைப் பார்க்கிறார்களோ
யஸ்ய அந்தம் = எவரை முழுவதுமாக
ஸுர அஸுரக³ணா: = தேவர்களும் அசுரர்களும்
ந விது³​: = அறியவில்லையோ
தே³வாய தஸ்மை நம​: = அந்த தேவனுக்கு வணக்கங்கள்

No comments: